×

அரசு அறிவித்த சம்பள உயர்வை டேன் டீ தொழிலாளர்களுக்கு வழங்க கோரி முதல்வருக்கு மனு

 

பந்தலூர்,செப்.1: தமிழ்நாடு அரசு டேன் டீ தொழிலாளர்களுக்கு அறிவித்த சம்பளத்தை வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக மாவட்ட பிரதிநிதி கணபதி தமிழ்நாடு முதல்வருக்கு எழுதியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு டேன் டீ தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்து ஓராண்டு கடந்தும் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காரக்கொல்லி பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டாயப்படுத்தி டேன் டீ தொழிலாளர்களை குடியமர்த்தும் போக்கை கைவிடவேண்டும். டேன் டீயில் முறையாக கணக்கெடுப்பு செய்து வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கி தனி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

The post அரசு அறிவித்த சம்பள உயர்வை டேன் டீ தொழிலாளர்களுக்கு வழங்க கோரி முதல்வருக்கு மனு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bandalur ,Tamil Nadu government ,Tea ,Minister ,Dinakaran ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...